உள்ளடக்கத்துக்குச் செல்

நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயக்கர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

நாயக்கர் (Nayak) என்பது மத்தியகால இந்திய வரலாற்றில் குறிப்பாக விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தை ஆளும் ஆளுநர்களை நாயக் அல்லது நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.[1] மேலும் நாயக்கர் எனும் சொல் தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் குலப்பெயராகவும் உள்ளது.

விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட மண்டலேஸ்வரர்கள், பாளையக்காரர்கள் (குறுநிலத்தை ஆண்டவர்கள்) நாயக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். நாயக்கர்கள் காப்பு, கொல்லா, கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு, ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா, கம்மா[3], தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், துளுவ வெள்ளாளர்களில் சிலர் அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.

நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

சொல்லிலக்கணம்

  • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
  • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
  • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
  • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
  • நாயக்கர் = நாயக் (மராத்தி)
  • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

பிரிவுகள்

தமிழகத்தில் நாயக்கர் பட்டத்தினை பயன்படுத்தும் சமூகத்தினர் பட்டியல் பின்வருவன.

கவரா

கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வணிக சமூகமாகும். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[4] பலிஜா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கவரை என்பதாகும்.[5] சோழன் பூர்வ பட்டயம் எனும் வரலாற்று நூலின்படி, சோழர் காலத்தில் செட்டிமையான பல குடிகளுக்கு தலைவர்களாக கவரை வளஞ்சியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.[6] வீர வளஞ்சியர் தர்மத்தின் பாதுகாவலர்களாக கவரை சமூகத்தினர் இருந்தனர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[7] வளஞ்சியர்கள், சிவபெருமானை கவரேசுவரன் என்ற பெயரில் வழிபட்டதன் காரணமாக கவரைகள் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றாளர்கள்‎ குறிப்பிடுகிறார்கள்.[8] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிக மக்களைக் குறிப்பதாகும்.[9] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[10] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[11]

கம்மவார்

கம்மவார் எனப்படுவோர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[12] இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தேனி, கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர்.[13] இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். கம்மநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். மேலும் காகதீய, விஜயநகர மன்னர்கள் காலத்திலும் படைத்தளபதிகளாகவும் படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் இளையரசனேந்தல், குருவிகுளம், நெய்க்காரப்பட்டி முதலிய ஜமீன்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

கொல்லா

கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.

வெலமா

தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.

முத்துராஜா நாயுடு[14][15][16][17]

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[18] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[19]

போயர்

போயர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வேட்டை சமூகமாகும். இவர்கள் தாங்கள் கண்ணப்ப நாயனார் வழிவந்தவர்கள் என்கின்றனர். இம்மக்கள் பேடர், வால்மீகி போன்ற பெயர்களிலும் அறியப்படுகின்றனர். விஜயநகரப் பேரரசு காலத்தில் அவர்களின் படைகளுடன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார்கள்.

தொட்டிய நாயக்கர்

தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். [சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.

இவர்கள் கொல்லாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர். இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 52 பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டதே. விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்க்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[20]

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

தெலுங்கு பேசுவோர் :

  1. கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
  2. சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர்
  3. தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு (வால்) பிடித்து சென்றவர்கள் .
  4. பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
  5. வேகிளியார் (சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம்) - சுத்தமானவர்கள் என்று பொருள், மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
  6. வல்லக்கவார் (ஏற கொல்லா) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால், சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
கன்னடம் பேசுவோர்
  1. காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
  2. அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
  3. குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.

இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.

ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர் (குடியான சாதி) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும், ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]

கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.[சான்று தேவை]

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[23]

காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :

  • திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
  • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
  • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
  • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
  • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
  • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
  • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

குறிப்பிடத்தக்க நபர்கள்

பலிஜா (கவரா) இனம்

கொல்லா (இராஜகம்பளம்) இனம்

கம்மவார் இனம்

வெலமா இனம்

பேடர் (போயர்) இனம்

மேலும் படிக்க

  1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
  2. கண்டி நாயக்கர்
  3. ராஜகம்பளம்
  4. பலிஜா
  5. போயர்
  6. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
  7. பனாஜிகா
  8. முத்துராச்சா
  9. வளஞ்சியர்

மேற்கோள்கள்

  1. Kathleen Gough (2008). Rural Society in Southeast India. Cambridge University Press. p. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-04019-8.
  2. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  3. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
    • கி. நாச்சிமுத்து, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39. இரண்டாவதாகச் செட்டிமையான பல குடிக்கும் கவறை வலைஞ்சியர்கள் தலைவர்களாக்கப் படுகிறார்கள். வலைஞ்சியர் என்பது பலிஜர் என்ற தெலுங்கு வணிக மக்களைக் குறிப்பதாகும். கொங்குநாட்டின் வாணிக மக்கள் கொங்கு செட்டியார் அல்லது வெள்ளான் செட்டியார் என்று அழைக்கப்படுவர் அவர்கள் கொங்கு வேளாளரின் ஒரு பிரிவு என்பது வரலாறு எனவே பலிஜர் என்ற இத் தெலுங்கு வணிகர்கள் சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறியவர்களாதல் வேண்டும், தெலுங்கனாகிய குலோத்துங்கன் சோழநாட்டுத் தலைமை ஏற்ற காலத்தில் தெலுங்குப் பகுதியிலிருந்து பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து குடியேறி இருப்பது இயல்பாகும்.
    • சி. எம். ராமச்சந்திர செட்டியார், ed. (1950). சோழன் பூர்வ பட்டையம். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 68.
    • எஸ். சௌந்தர பாண்டியன், ed. (1995). தமிழக ஊர் வரலாறுகள். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 69.
    • T. Venkateswara Rao, ed. (1978). Prasasti of The Vira Balanja. Vol. 6. Itihas. p. 74. A Chintapalli record of S. 1162 mentions that the Ubhaya - Nānādēsi , Mummuridandas and Gavares were the protectors of the Vira - Balanja - Dharma.
    • K. Sundaram, ed. (1968). "The Balanja Merchant Community of Medieval Andhra, (A. D. 1300 - 1600)". Studies in Economic and Social Conditions of Medieval Andhra, A. D. 1000-1600. Triveni Publishers. p. 72. In one of the early inscriptions of the merchants from Chintapalli in Guntur District of the year A.D. 1240, it is mentioned that Ubhaya Nanadesis, Gavares and Mummaridandas as protectors of Vira Balanja Dharma.
    • Vasant K. Bawa, ed. (1975). Aspects of Deccan History. Institute of Asian Studies. p. 120. One record from Chintapalli 26 in the Guntur district , dated S. 1162 , states the Virabalamja - samaya was composed of the Ubhaya - nanadesi , the Gavares and the Mummiridandas.
  4. G. Karunanithi, ed. (1991). Caste and Class in Industrial Organisation. Commonwealth Publishers. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171691425. A section of the Naidu migrants in Tamilnadu call themselves Kavarais. They are included in the list of backward classes. They have marital relationship with the Balijas.
  5. Itihas. Vol. 18. Andhra Pradesh State Archives & Research Institute. 1992. p. 66.
  6. Sastry, P. V. Parabrahma (1996), Rural Studies in Early Andhra, V.R. Publication, p. 59
  7. Dalel Benbabaali (2018), Caste Dominance and Territory in South India, Modern Asian Studies, p. 6-7
  8. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, ed. (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780803996397. The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house {{cite book}}: no-break space character in |editor1-last= at position 22 (help); no-break space character in |title= at position 17 (help)CS1 maint: multiple names: editors list (link)
  9. Eveline Masilamani-Meyer, ed. (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783447047128. Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.
  10. K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185692203. Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh
  11. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, ed. (1981). Biology of the People of Tamil Nadu. p. 21. Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  12. ந. சி கந்தையா பிள்ளை (ed.). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 156. முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள் {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help); no-break space character in |quote= at position 13 (help)
  13. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. p. 102. செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர் {{cite book}}: no-break space character in |editor1-last= at position 5 (help); no-break space character in |publisher= at position 6 (help)CS1 maint: multiple names: editors list (link)
  14. [1]
  15. N.K., Singh. "Coronation of Shiva: Rediscovering Masrur Temple". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  16. "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்". https://www.hindutamil.in/amp/news/others/121663-14.html. 
  17. "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
    • T. Chandrasekharan, ed. (1951). A Descriptive Catalogue of the Telugu Manuscripts (PDF). Vol. 13. The Government Oriental Manuscripts Library, Madras. p. 2863. No.2607 KOTIKAMVARI KAIFIYATU - A Kaifiyat relating to Garikipati Viswanathanayaka of Balijakula who was given Pandya kingdom by Atchutadevaraya.
    • K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 176. Moreover, Acyutadeva Maharaya formally crowned Viswanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the king of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him the golden idols of Durga, Laksmi and Lakshmi-Narayana and sent him with ministers, councillors and troops to the south. Visvanatha Nayudu reached the city of Madhura, from which he began to govern the country entrusted to his care. - taken from the Kaifiyat of Karnata-Kotikam Kings, LR8, pp.319-22
    • Konduri Sarojini Devi, ed. (1990). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-1167-9. According to the Kaifiyat of the Karnata Kotikam Kings, "Acyutadeva Maharaya formally crowned Visvanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the King of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him with golden idols of Durga, Lakshmi and Lakshminarayana and sent him with ministers, councillors and troops to the South."
    • Lennart Bes (2022). The Heirs of Vijayanagara: Court Politics in Early Modern South India. Leiden University Press. p. 79. The dynasty's first ruler was Vishvanatha Nayaka, son of the imperial courtier and military officer Nagama Nayaka. He belonged to one of the Balija castes, which originated in the Telugu region and whose members undertook both military and mercantile activities. Vishvanatha was possibly installed at Madurai around 1530 and reigned until c. 1563
  18. N. Venkataramanayya (1951). Raghunatha Nayakabhyudayamu. T.M.S.S.M Library, Thanjavur. p. 21.
    • Noboru Karashima, ed. (1999). Kingship in Indian History. Manohar Publishers & Distributors. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173043260. To understand the historical process of the reducing of the Nayakas as an open status group into a mere shell of what they had formerly been and the growth of respective caste identities, the Telugu Balija caste and its history may give an important clue. Many Nayakas, including the three major Nayakas in the Tamil area and the Nayakas of Cannapattana, Beluru, and Rayadurga in the Kannada area, are said to have been Telugu Balijas.
    • M.M.Kalburgi, ed. (1994). Karnatakada Kaifiyattugalu. Kannada University , Hampi. p. 118.
    • K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 302. On Sravana ba. 10 of Yuva of 146 years ago corresponding to S. S. 1558, (the Raya) granted the government of Penugonda to Koneti Nayadu, the son. of Kastuiri Nayadu, the son of Akkapa Nayadu, who was the son of Canca(ma) Nayadu of Candragiri, a member of the Vasarasi family of the Balija caste.
    • Bulletin of the Government Oriental Manuscripts Library, Madras. Superintendent Government Press. 1954. p. 49. The above said Peda Kōnēti Nṛpati ( Nayak ) First , king of Penukonda . ( 1635 A.D. ) then of Kundurti ( 1652 A.D. ) and of Rayadurga ( 1661 A.D. ) was a Balija by caste , having the surname Vānarāsi . His father Kastūri Nāyak and grand father bencama Nayak had enjoyed high favour with the fallen kings of Vijayanagar who were ruling at Chandragiri
  19. Na.Vanamamalai, ed. (1981). Interpretation of Tamil Folk Creations. Dravidian Linguistics Association. p. 178.
  20. Ramaswamy, Vijaya (2014), "Mapping migrations of South Indian weavers before, during and after the Vijayanagara Period: Thirteenth and Eighteenth Centuries", in Lucassen, Jan; Lucassen, Leo (eds.), Globalising Migration History: The Eurasian Experience (16th-21st Centuries), BRILL, p. 99
  21. A. Satyanarayana, ed. (2007). Society, Economy, and Polity in Modern Andhra. Kanishka Publishers Distributors. p. 7.
  22. Kotta Bhavaiah Choudary, ed. (2007). A Brief History of the Kammas. The University of California. p. 63.
  23. Far-Eastern Prehistory Association, ed. (2003). Asian Perspectives. Vol. 42. University Press of Hawaii. p. 269, 270.
  1. Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
  2. Balijakula Charithra, by Kante Narayana Desayi
  3. Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்கர்&oldid=4088680" இலிருந்து மீள்விக்கப்பட்டது